’விஸ்வாஸம்’ எப்போ வேணும்னாலும் ரிலீஸாகட்டும்... கொஞ்சம் தஞ்சாவூர் பக்கம் தல காட்டுங்க அஜீத்’

By vinoth kumarFirst Published Nov 24, 2018, 10:48 AM IST
Highlights

‘தக்‌ஷா மாணவர்களை சந்திக்கிறதுல காட்டுற ஆர்வத்துல கொஞ்சமாவது தஞ்சாவூர் மக்களை சந்திக்கிறதுல காட்டலாமே அஜீத்’ என்று நெட்டிசன்கள் நடிகர் அஜீத்தை மானாவாரியாக வறுத்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


‘தக்‌ஷா மாணவர்களை சந்திக்கிறதுல காட்டுற ஆர்வத்துல கொஞ்சமாவது தஞ்சாவூர் மக்களை சந்திக்கிறதுல காட்டலாமே அஜீத்’ என்று நெட்டிசன்கள் நடிகர் அஜீத்தை மானாவாரியாக வறுத்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘விஸ்வாஸம்’ படவேலைகள் முடிந்தவுடன் ஹாயாக குடும்பத்தோடு கோவா சென்ற அஜீத் இந்த நிமிடம் வரை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு ஆறுதல் அறிக்கை கூட அனுப்பவில்லை. சிவகார்த்திகேயன்,சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நல்ல நிதி உதவி செய்ததுடன், களத்துக்கு தொடர்ந்து நிவாரணப்பொருட்கள் சென்றுசேர உதவிகளும் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் படத்துக்கு 30 முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்கும் அஜீத் ஏதோ மொராக்கோ நாட்டு புயலுக்கு அமைதி காப்பதுபோல் மவுனமாக இருக்கிறார். இது பொதுமக்களை மட்டுமல்ல அஜீத் ரசிகர்களையும் கொதிப்படையச் செய்துள்ளது.

போதாக்குறைக்கு ரிமோட்டில் குட்டி விமானங்களை இயக்கிவரும் தக்‌ஷா குழுவினருக்கு அவர் தொடர்ந்து நேரில் சந்தித்து ஆதரவு தருவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கவே, ‘தல புயல் பாதிப்பினால தத்தளிக்கிற தஞ்சாவூர் மக்களையும் கொஞ்சம் எட்ட்ப்பாருங்க’ என்று வேண்டுகோள் வைக்கிறார்கள் மக்கள். நீத் தாமதாவது மட்டுமல்ல, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்குப்போய்ச்சேரவேண்டிய நிதி தாமதமாவது கூட அநீதிக்குச் சமமாகும்னு தல கிட்ட யாராவது எடுத்துச்சொல்லுங்க பாஸ்.

click me!