ரஜினி உடல்நலம் பற்றிய வதந்தி... பரப்பி விட்டது யார்?

Published : Nov 24, 2018, 10:04 AM ISTUpdated : Nov 24, 2018, 10:10 AM IST
ரஜினி உடல்நலம் பற்றிய வதந்தி... பரப்பி விட்டது யார்?

சுருக்கம்

நேற்று மாலை காட்டுத்தீயென பரவிய ரஜினியின் உடல்நலம் பற்றிய வதந்தி, ‘அவர் மிகவும் நலமுடன் உள்ளார். வதந்திகளை நம்பவேண்டாம்’ என்று ரசிகர் மன்றம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டதன் மூலம்  தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.

நேற்று மாலை காட்டுத்தீயென பரவிய ரஜினியின் உடல்நலம் பற்றிய வதந்தி, ‘அவர் மிகவும் நலமுடன் உள்ளார். வதந்திகளை நம்பவேண்டாம்’ என்று ரசிகர் மன்றம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டதன் மூலம்  தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.

 ரஜினி மன்றத்தின் மூலம் கஜா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை என்பதை ஒட்டி புறப்பட்ட அந்த வதந்தியை ரஜினி சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லையாம். ‘ஒரு வாரம் லேட்டாவாவது இந்த கமலஹாஸன் வந்துட்டாரு. ஓவரா பேசுன அந்த ரஜினி எப்பய்யா டெல்டா பகுதிகளுக்கு விசிட் அடிப்பாரு? என்று அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் வெளிப்படையாகவே கமெண்ட் அடித்திருப்பது ரஜினியின் காதுக்குப் போயிருக்கிறது.

இதைக்கேட்டு ஓவர் டென்சனான ரஜினி ‘2.0’ ரிலீஸுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ஒரே ஒரு நாளாவது புயல் பாதித்த பகுதிகளுக்கு விசிட் அடிக்க தனது உடல்நலன் ஒத்துழைக்குமா என்று தெரிந்துகொள்ள டாக்டரை வரவழைத்து செய்துகொண்ட நார்மலான செக் அப்தானாம் அது.

அதை ஊதிப்பெரிதாக்கிய அதிமுக தலைமைக்கு பதிலடி தரவும், வதந்திகளால் பதறிப்போயிருக்கும் ரசிகர்களைக் குளிர்விக்கவும் இன்றோ நாளையோ தனது தஞ்சை விசிட்டை அறிவிக்கவிருக்கிறார் ரஜினி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!