தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் முதன்மை நாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா, படத்துக்கு படம் தேர்வு செய்யும் கதையின் தரத்தையும், அதற்கு ஏற்றாப்போல் தன்னுடைய சம்பளத்தையும் ஏற்றி இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் முதன்மை நாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா, படத்துக்கு படம் தேர்வு செய்யும் கதையின் தரத்தையும், அதற்கு ஏற்றாப்போல் தன்னுடைய சம்பளத்தையும் ஏற்றி இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இதுவரை ஒரு படத்திற்கு 4 கோடி வீதம் சம்பளம் பெற்று வந்த இவர் 'கோலமாவு கோகிலா' படத்திற்கு பின் ரூ.6 கோடியாக சம்பளத்தை உயர்த்தி விட்டாராம்.
இதற்கு முக்கிய காரணமும் இந்த திரைப்படம் தானாம். அதாவது இவருடைய நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' ரூ.12 கோடி வசூல் செய்தது. மேலும் இந்த படத்துடன் வெளி வந்த பெரிய நடிகரின் படமே ரூ.9 கோடி தான் வசூல் செய்த நிலையில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்துவதில் தவறு இல்லை என கதை சொல்ல வரும் இயக்குநர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் காரம் சாரமாக கூறி வருகிறாராம்.