நான் சிரித்தால்' முடிந்தது... சுந்தர் சி - ஹிப்ஹாப் தமிழா ஹாட்ரிக் கூட்டணியின் புதிய பட ஷுட்டிங் அப்டேட்!

By Selvanayagam PFirst Published Nov 21, 2019, 10:43 PM IST
Highlights

இயக்குநர் சுந்தர் சி-யின் 'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி, 'தனி ஒருவன்', 'கவன்', 'இமைக்கா நொடிகள்' படங்களில் தனது துள்ளலான இசையால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். 
 

தொடர்ந்து, 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடிகராகவும் அவர் அறிமுகமானார். இந்தப் படம், ஆதிக்கு நல்ல ஓபனிங்கை கொடுத்தது. 
இதனையடுத்து, அவர் நடித்த 'நட்பே துணை' படமும் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி ஹீரோவா நடித்த இவ்விரு படங்களையும் இயக்குநர் சுந்தர் சி தயாரித்திருந்தார்.

முதல் இரு படங்களும் கமர்ஷியலாக வெற்றியடைந்ததை அடுத்து, 3-வ முறையாக சுந்தர் சி தயாரிப்பில் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி நடிக்கும் படம்தான் 'நான் சிரித்தால்'. இந்தப் படத்தை ராணா இயக்குகிறார். 'கெக்க புக்க கெக்க புக்க' என்ற குறும்படத்தைதான் 'நான் சிரித்தால்' என்ற வெள்ளித்திரை படமாக இயக்கியுள்ளார். 

இந்த படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். நடிப்பதுடன் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதியே இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கடந்த ஆயுத பூஜைக்கு 'நான் சிரித்தால்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

அதன்பின்னர், படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், சத்தமே இல்லாமல் நடந்து வந்த 'நான் சிரித்தால்' படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த தகவலை இயக்குநர் ராணா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

click me!