
நாடோடிகள், வருத்தப்படாத வாலிபர் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் கே.கே.பி.கோபாலகிருஷ்ணன்.
நாடோடிகள் படத்தில் கதாநாயகி அனன்யாவின், தந்தையாக நடித்திருந்த இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. எப்படியாவது அனன்யாவை, சசிகுமாருக்கு மனம் மாறி திருமணம் செய்து வைத்துவிட மாட்டாரா என, திரையரங்கத்தில் முனங்கிய ரசிகர்களும் பலர் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவர், கும்பகவுண்டம்பாளையத்தில் உள்ள அவருடைய வீட்டில் வசித்து வந்தார். 54 வயதாகும் இவர், இன்று காலை திடீர் என ஏற்பட்ட, நெஞ்சுவலி காரணமாக மரணமடைந்துவிட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில், பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி, கே.கே.பி. கோபாலகிருஷ்ணனின் புகைப்படத்தோடு கூடிய இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். இவரின் மறைவு திரையுலகத்திரையும், அவருடைய குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.