
தமிழ் சினிமாவில், பல படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருபவரும், கோபுரம் பிலிம்ஸ் சார்பில், மருது, தங்கமகன், வெள்ளைக்கார துறை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவருமான தயாரிப்பாளர் அன்புச்செழியன். இவர் வரி ஏய்ப்பு புகாரில் ஈடுபட்டதாக கூறி வருமான வரி துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்டமாக அவருக்கு சொந்தமாக தி.நகரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இன்று காலை, ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், தற்போது அன்பு செழியன் வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.