விஜய் ரசிகர்களுக்கு கிடைத்தது நல்ல செய்தி..! "மெர்சலுக்கு" தடையில்லா சான்றிதழ்...!

Asianet News Tamil  
Published : Oct 16, 2017, 02:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
விஜய் ரசிகர்களுக்கு கிடைத்தது  நல்ல செய்தி..!  "மெர்சலுக்கு" தடையில்லா  சான்றிதழ்...!

சுருக்கம்

mersal got clearance from all the issues

விஜயின் மெர்சல் திரைப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து சென்னையில் விலங்குகள் நல வாரியம் இன்று அவசர ஆலோசனை நடத்தியது.

அதாவது படத்தில் ஒரு காட்சியில் விஜய் தன் கையில் புறா  வைத்து இருப்பது போன்று ஒரு காட்சி எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்னதாக, பட பெயருக்கு சொந்தம் கொண்டாடி  நீதிமன்றம் வரை சென்று, ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு  வந்தது.

இந்நிலையில், படத்துக்கு புதிய சிக்கலாக விலங்குகள் நல வாரியம் புறா மூலம் செக் வைத்தது. இந்தச் சிக்கலை சரிசெய்ய தயாரிப்பாளர் தரப்பு விஜயை முதல்வரிடம் உதவியை நாடினால் படம் ரிலீஸ் ஆவதில் இருக்கும் சிக்கலை சமாளித்து விடலாம் என ஐடியா கொடுத்தார்களாம். 

இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்து பிரச்சனையை எடுத்து கூறினார் விஜய்.இதனைத்தொடர்ந்து, இன்று காலை 10 மணி அளவில் 'மெர்சல்' பிரச்னை குறித்து விலங்குகள் நல வாரியம் ஆலோசிக்க கூட்டத்தை தொடங்கியுள்ளது.

ஆலோசனை முடிவில்,மெர்சல் திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கியது.இதனால் பல தடைகளை மீறி மெர்சல் திரைப்படம் திரைக்கு வருவதால்,ரசிகர்கள் பெரும் கொண்டாடத்தில் உள்ளனர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திருமணம் செய்ய வயது மட்டும் போதாது.. நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம்! நடிகை பிரகதி ஓப்பன் பேச்சு!
ஆன்லைனில் ஏமாந்த ஜி.வி. பிரகாஷ்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அந்த மர்ம நபர்! நடந்தது என்ன?