
68 ஆவது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் யோகி பாபு நடித்த 'மண்டேலா' திரைப்படம் இரண்டு விருதுகளையும் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான 'சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் மூன்று விருதுகளையும் வாங்கியுள்ளது.
திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய விருதுகள் இன்று புது தில்லியில் உள்ள தேசிய விருது மையத்தை அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது தேசிய விருதுகளை பெறும் படங்கள் மற்றும் பிரபலங்களின் பட்டியல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் சுதா கங்கோரா இயக்கத்தில் வெளியான 'சூரரை போற்று' திரைப்படம் சிறந்த பின்னணி, இசை, சிறந்த ஸ்கிரீன் ப்ளே, சிறந்த வசனம், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் விருதுகளை வாங்கி குவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நடிகர் யோகி பாபு மற்றும் ஷீலா ராஜ்குமார் நடிப்பில் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மண்டேலா திரைப்படம், சிறந்த வசனத்திற்கான விருதையும், சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது என இரண்டு விருதுகளை இப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு வாங்கி கொடுத்துள்ளது.
அதே போல் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான 'சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் மூன்று விருதுகளை அள்ளி உள்ளது. சிறந்த தமிழ் படமாக சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த படத்தொகுப்புக்கான விருதையும் (ஸ்ரீகர் பிரசாத் )பெறுகிறார், அதே போல் சிறந்த துணை நடிகைக்கான விருதை (லட்சுமி பிரியா) பெற உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.