ஹோட்டல் அறையில் இறந்த கிடந்த நடிகர்! 2 நாட்களாக உள்ளே நடந்தது என்ன?

Published : Dec 29, 2024, 09:37 PM ISTUpdated : Dec 29, 2024, 09:43 PM IST
ஹோட்டல் அறையில் இறந்த கிடந்த நடிகர்! 2 நாட்களாக உள்ளே நடந்தது என்ன?

சுருக்கம்

மலையாள நடிகர் திலீப் சங்கர் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 47 வயதான அவர் இரண்டு நாட்களாக அறையை விட்டு வெளியே வரவில்லை.

மலையாள நடிகர் திலீப் சங்கர் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அண்மையில்  அந்த ஹோட்டலுக்குச் சென்ற மர்மமான முறையில் இறந்துள்ளார். அவருக்கு 47 வயது.

நடிகர் திலீப் சங்கர் மலையாளத்தில் சினிமாவிலும் டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். 2 நாட்கள் அறையிலேயே இருந்த அவர், வெளியே வரவே இல்லை என்று கூறப்படுகிறது. அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து உள்ளே சென்று பார்க்க ஹோட்டல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முதலில், பல முறை கதவைத் தட்டி அழைத்தபோதும் உள்ளே இருக்கும் திலீப்பிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் ஹோட்டல் ஊழியர்கள் தாங்களே கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றனர். அங்கு திலீப் சங்கர் சடலமாகக் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

அசைவில்லாமல் படுத்திருப்பதைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உள்ளூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?