இரண்டாவது திருமணம் பற்றி முதல் முறையாக மனம் திறந்த மதுரை முத்து.....!!!

First Published Dec 3, 2016, 10:38 AM IST
Highlights


சின்னத்திரையில் காமெடியில் கலக்கி வரும் மதுரை முத்து தன் மனைவி இழப்பால் மிகவும் வேதனையில் இருந்தார். இதை தொடர்ந்து மிகவும் கஷ்டமான கருத்துக்களாக பகிர்ந்தார் என்பது அனைவரும்  அறிந்தது தான் .


திடிரென்று ஒருநாள் தனக்கு திருமணம் என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார், இதை தொடர்ந்து பலரும் அவரை திட்ட, அதை நீக்கினார்.

தற்போது இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார், இதில் ‘என் மனைவி மீது நான் எத்தனை அன்பு வைத்திருந்தேன் என என் நண்பர்களுக்கு தெரியும்.

நானும் பல நாட்களாக இதனால் மிகவும் மனவருத்தத்தில் இருக்க, சில கருத்துக்கள் என்னை மிகவும் பாதித்தது, அதனாலேயே என் இரண்டாவது திருமண புகைப்படத்தை பேஸ்புக்கிலிருந்து நீக்கினேன்.

மனைவி இல்லாமல் நான் இருக்கலாம், ஆனால், என் மகள்கள் அம்மா இல்லாமல் வளர்பது  கடினம் அதனால் .

தற்போது திருமணம் செய்திருக்கும் நித்தி என் மனைவியின் தோழி தான், அவர் என் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்றும் .

அதன் காரணமாகவே அவரை திருமணம் செய்துக்கொண்டேன், தற்போது என் இரண்டு குழந்தைகள் அவருடன் நன்றாக பழகுகிறார்கள்’ என கூறியுள்ளார்.

அதனால் முதலில் தனக்கு திருமணம் ஆகா வில்லை என்று மறுத்து வந்த முத்து முதல் முறையாக திருமணம் ஆனா விஷயத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

click me!