பெப்சி ஊழியர்களுக்கு ஓடி வந்து உதவி செய்த மாஸ்டர் பட இயக்குனர்!

Published : Mar 25, 2020, 10:10 AM IST
பெப்சி ஊழியர்களுக்கு ஓடி வந்து உதவி செய்த  மாஸ்டர் பட இயக்குனர்!

சுருக்கம்

கொரோனா வைரஸ், பாதிப்பு தமிழகத்தில் அதிகமாவதை தடுக்க, தற்போது 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 31 ஆம் தேதி வரை, போடட்ட இந்த தடை மேலும் 21 நாட்கள் நீடிக்கும் என பாரத பிரதமர் மோடி நேற்று அவர் நிகழ்த்திய உரையில் தெரிவித்தார் .  

கொரோனா வைரஸ், பாதிப்பு தமிழகத்தில் அதிகமாவதை தடுக்க, தற்போது 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 31 ஆம் தேதி வரை, போடட்ட இந்த தடை மேலும் 21 நாட்கள் நீடிக்கும் என பாரத பிரதமர் மோடி நேற்று அவர் நிகழ்த்திய உரையில் தெரிவித்தார் .

படப்பிடிப்பு பணிகள் மற்றும் சீரியல் தயாரிப்பு பணிகள் முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால், பெப்சி தொழிலாளர்கள் வேலை இன்றி கஷ்டப்பட்டு வருவதாக பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி வெளியிட அறிக்கையில் உருக்கமாக தெரிவித்தார்.

இதையடுத்து திரையுலகை சேர்த்த பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதி உதவிகளையும், அரிசி போன்ற பொருட்களையும் கொடுத்து பெப்சி ஊழியர்களுக்கு உதவி வருகிறார்கள்.

சூர்யா 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் 50 லட்சம், நடிகர் விஜய் சேதுபதி 10 லட்சம் ரூபாய், என ஒருபக்கம் நிதி உதவி குவிந்து வரும் நிலையில், கலைப்புலி எஸ் தாணு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், போன்றவர்கள் அரிசி மூட்டைகளை கொடுத்து பெப்சி தொழிலாளர்களின் பசியை போக்க உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?