
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாப்பாடு பத்தவே இல்லை குறைவாக கொடுக்கிறார்கள் அதனால் அமைதியாக இருக்கிறேன் அதை நேர்மையற்றவன் என்று சொல்வதா என்று சொல்வதா என சுப்ரமணியபுரம் பரணி ஆவேசமாக கேட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று விருது வழங்கப்பட்டதில் பரணிக்கு நேர்மையற்றவர் என விருது வழங்கப்பட்டது. இதற்கு பிக்பாஸ் தலைவர் சினேகன் கூறிய காரணம் அவர் யாரோடும் நெருங்கி பழகாமல் தனித்து இருக்கிறார்.
அதனால் இந்த விருதை அவருக்கு வழங்குகிறேன் என்று தெரிவித்தார். நேர்மையற்றவன் என்ற விருதில் கைவிலங்கு சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்த பரணி கடுப்பாகி நான் நேர்மையற்றவன் என்று அண்ணன் எப்படி கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை.
அவருக்கு நான் நேர்மையற்றவன் என்பது தெரிந்துள்ளது , என்னைப்பொறுத்தவரை நான் நன்றாக சாப்பிடுவேன் ஆனால் இங்கு எனக்கு சாப்பாடு குறைவாக கிடைக்கிறது அதனால் நான் கேட்டு எதுவும் பிரச்சனை ஆகிவிடப்போகிறது என்று சும்மா இருக்கிறேன் .
யாரிடமாவது பேசினால் வம்பாகிவிடும் என்பதால் அமைதியாக இருப்பதை நேர்மையற்றவன் என்பதா என வருத்தத்துடன் கேட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.