காதல் தோல்விகளுக்கு காரணம் இதுதான்... முதல் முறையாக மனம் திறந்த நயன்தாரா...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 15, 2020, 10:52 AM IST
Highlights

நயன்தாரா தனது காதல் தோல்விகளுக்கான காரணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார்

தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை  எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். 


தோல்வி தான் வெற்றிக்கு முதற்படி என்பார்கள். ஆம்... நயன்தாரா அடுத்தடுத்து சந்தித்த காதல் தோல்விகளும், நம்பிக்கை துரோகமும் தான் இப்படி விஸ்வரூப வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மாறியுள்ளது. சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சிம்பு - நயன்தாரா காதலித்து வந்த சங்கதி அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. அதன் பின்னர் சிம்பு - நயன்தாரா காதல் முறிந்தது. 


இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா, பிரபுதேவா இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக வில்லு படத்தில் நடித்தார். அப்போது பிரபுதேவாவிற்கும் நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. திருமணம் வரை சென்ற அந்த காதல் சில சிக்கல்களால் பிரிவில் முடிந்தது. தற்போது நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த செய்தி. 


இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

இந்நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள நயன்தாரா தனது காதல் தோல்விகளுக்கான காரணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார். “நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் நிலைப்பது இல்லை. அதுதான் எனது காதல் தோல்விகளுக்கு காரணம். நம்பிக்கை இல்லாதவர்களுடன் இருப்பதை விட, தனியாக கூட வாழ்ந்துவிடலாம். காதல் தோல்விகளில் இருந்து வெளியே வர நீண்ட நாட்கள் தேவைப்பட்டது. அதில் இருந்து மீண்டு வர எனக்கு உதவியது எனது திரைப்படங்களும், எனக்கு ஆதரவாக நின்ற ரசிகர்களும் தான்” என்று தெரிவித்துள்ளார். 
 

click me!