பள்ளி மாணவிகளை கூட விட்டுவைக்காத காசி வலையில் சிக்கிய பிரபல நடிகரின் மகள்! அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்!

By manimegalai aFirst Published Apr 27, 2020, 11:02 AM IST
Highlights

அழகையும், ஆன்லைனை மட்டுமே மூலத்தனமாக வைத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவர் முதல் பள்ளி மாணவிகள் வரை, பலரை ஆபாசமாக வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்த கோழி கடை காசியில் காதல் வலையில் பிரபல நடிகரின் மகளும் சிக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

அழகையும், ஆன்லைனை மட்டுமே மூலத்தனமாக வைத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவர் முதல் பள்ளி மாணவிகள் வரை, பலரை ஆபாசமாக வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்த கோழி கடை காசியில் காதல் வலையில் பிரபல நடிகரின் மகளும் சிக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இறைச்சி கடை வியாபாரி தங்கபாண்டியன். இவருடைய மகன் தான் காசி. MBA வரை படித்த இவருக்கு சரியான வேலை கிடைக்காததால், தன்னுடைய தந்தையின் கோழி கடையையே கவனித்து வந்துள்ளார்.

கடை வேலை முடிந்ததும் எந்நேரமும், சமூக வலைத்தளத்தில் மூழ்கியுள்ளார். ஜிமில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள், உதவிகள் செய்யும் புகைப்படம், மற்றும் தன்னை அழகாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு பெண்களை கவர்ந்துள்ளார். 

மேலும் செய்திகள்: இளகிய இடையை தவழ பிடித்திருக்கும் மெல்லிய புடவை..! பின்னழகு... முன்னழகு... இரண்டையும் காட்டி மயக்கும் சாக்ஷி!
 

இவருக்கு கமெண்ட் செய்யும் பெண்களிடம், வழிய சென்று பேசி.. மெல்ல மெல்ல  நட்பை வளர்த்து கொண்டு, அவர்களிடம் போன் நம்பர் பெற்று நாள் கணக்கில் பேசி அவர்களை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி, தனிமையில் சந்தித்து, பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டது மட்டும் இன்றி, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.

அப்பாவி போல் முகத்தை வைத்து கொண்டு இதுவரை 100 க்கும் மேற்பட்ட பலரை இவர் சீரழித்துள்ளதாக தெரிகிறது. 

மேலும் செய்திகள்: பட வாய்ப்புக்காக இவ்வளவு மோசமா உடலை காட்டி போட்டோ ஷூட் நடத்திய ஸ்ரீ திவ்யா! அதிரவைக்கு உண்மை!
 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, காசியில் வலையில் பிரபல நடிகர் ஒருவரின் மகளும் சிக்கி சீரழிந்துள்ளதாகவும், அவர் உடனடியாக போலீஸ் புகார் தரவே அவரை விட்டு விலகியுள்ளார் காசி. இந்த தகவல் வெளியானதில் இருந்து, எந்த நடிகரின் மகள் இந்த பாவியிடம் சிக்கி சீரழிந்தது என பலர் மூளையை கசக்கி வருகின்றனர். எனினும் போலீசார் அவர் யார் என்பதை தெரிவிக்காமல் மிகவும் ரகசியமாகவே வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காசியின் அணைத்து லீலைகளை பெண் மருத்துவர் ஒருவரால் தற்போது வெளியாகி, தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தாது. 

click me!