
நடிகர் கமலஹாசன் இன்னும் தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி உறுதியாக அறிவிக்காமலேயே நேற்று திடீர் என எண்ணூர், வல்லூர் மின் நிலையம் மற்றும் வடசென்னை மின் நிலையமும் கொசஸ்தலை ஆற்றில் கொட்டி வரும் சாம்பல் கழிவுகளை பார்வையிட்டார்.
கமலின் விசிட் குறித்து அறிந்த ஒரு சில மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் 'சுந்தர வள்ளி' இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பல முறை மனு கொடுத்தும் இது குறித்து கண்டுக்கொள்ளாமல் இருந்த அரசு நிர்வாகம் திடீர் என கவனம் செலுத்துவதால் தங்களுடைய குறை விரைவில் தீர்க்கப்படும் என அந்த பகுதி மக்கள் நம்புகின்றனர்.
தற்போது இவர்களது நம்பிக்கைக்கு உயிர் ஊட்டும் வகையில் எண்ணூர் பகுதியில் தொடர்ந்து பல மாற்றங்கள் அரங்கேறி வருகிறது.
கமல் விசிட் அடித்த மறுநாளே, அதாவது இன்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, கைகளில் விழுப்புணர்வு பதாதைகளை ஏந்தி பேரணி நடத்தி வருகின்றனர்.
இத்தனை நாள் போராடியும் கண்டுக்கொள்ளாத அரசு, கமல் கால் வைத்தை அடுத்து நிகழும் மாற்றத்தை கண்டு அந்த பகுதி மக்களே மீள முடியாத திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.