
உலக நாயகன் கமல் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோரை வைத்து பிரம்மாண்டமான திரைப்படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இளம் இயக்குனர் ஈடுபட்டுள்ளார். கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பாடலை எழுதியதுடன் அவரது கனீர் குரலில் பாடி அசத்தியிருப்பார் அருண் ராஜா காமராஜ். நெருப்புடா பாடலுக்கு பிறகு அருண்ராஜா மிகவும் பிரபலம் ஆனால். அதுமட்டும் இல்லாமல் விஜயின் பைரவா படத்திலும் இவர் எழுதிய பாடல் வரவேற்பை பெற்றது. மேலும் விஜயின் தெறி படத்திலும் அருண்ராஜா காமராஜா பாடல் எழுதியுள்ளார்.
ஆனால் அருண் ராஜா புதிய முயற்சி ஒன்றை துவங்கியுள்ளார். அந்த முயற்சி இந்திய அளவில் பிரமாண்டமான ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. காரணம் தனது டபுள் ஹீரோ சப்ஜெக்டில் கமல் – விஜய் ஆகியோரை நடிக்க வைக்க அருண்ராஜா முயற்சி மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே விஜயுடன் நல்ல பழக்கம் வைத்துள்ள அருண்ராஜா, தனது டபுள் ஹீரோ சப்ஜெக்டை விஜயிடம் கூறியுள்ளார். படத்தின் ஒன்லைன் கதையை ஏற்கனவே விஜயிடம் அருண்ராஜா கூற கதையை டெவலப் செய்யுமாறு பதில் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.