
பொதுவாக சினிமாவில் சாதித்த நடிகைகள் பலர் பல்வேறு கஷ்டங்களைக் கடந்துதான் சாதித்துள்ளனர். இதனை பல நடிகைகள் ஒப்புக்கொண்டும் உள்ளனர்.
நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிறகு, தமிழ், மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகைகள் பலர் தாங்களும் பல்வேறு பாலியல் சீண்டல்களுக்கு ஆளானதாகத் தெரிவித்திருந்தனர்.
இப்படி, பல்வேறு மொழிப் படங்களிலும் போராடி முன்னணி இடத்திற்கு வந்த நடிகைகள் பலரின் வாழ்வில் ஏதோ ஒரு பகுதி கருப்பு நிறப் பகுதியாகத் தான் உள்ளது. இதில் சிக்காத ஹீரோயின்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கைக் கதைகளை அவ்வப்போது தெரிவித்து விடுகின்றனர். நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து வந்த ஹீரோயின்கள் கூட இதில் சிக்கி விடுகிறார்கள். அண்மைக் காலமாக, தாங்கள் பட்ட கஷ்டங்களை பலரும் வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஆஸ்கர் நாயாகி ஜெனிபர் லோரன்ஸ், ஆரம்பக்காலத்தில் படங்களில் நடிக்க முயற்சித்த போது ஒரு தயாரிப்பாளர் இவரை நிர்வாணமாக 5 மணி நேரத்திற்கு மேல் நிற்க வைத்தாராம், அப்படி நிற்க மறுத்த பெண்களுக்கு சம்பளத்தில் பாதியை பிடித்தார்களாம். இந்தத் தகவலை ஜெனிபர் சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.