விரக்தியின் உச்சத்தில் இயக்குநர் ஷங்கர்... லைகா போட்ட கன்டிஷனால் நொந்து போன சம்பவம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 16, 2020, 7:07 PM IST
Highlights

ஆனால் அந்த தகவலை மறுத்த லைகா நிறுவனம் கண்டிப்பாக படத்தை வெளியிடுவோம் என்று உறுதி அளித்தனர். 

பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். 2017ம் ஆண்டே இந்தியன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியான போதும், ஷூட்டிங் கடந்த ஆண்டு தான் தொடங்கியது. 

 

இதையும் படிங்க: ஸ்ருதி ஹாசன் உடலில் எங்கெல்லாம் டாட்டூ குத்தியிருக்காங்க தெரியுமா?... விளக்கத்துடன் கிளுகிளுப்பு கிளிக்ஸ்...!

இந்நிலையில் பிப்ரவரி மாதம் இந்தியன் 2  படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் சண்டைக்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு கிரேன் விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வந்ததால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. 

 

முதலில் படத்திற்கு லைகா ஒப்புக்கொண்ட பட்ஜெட் 350 கோடியாம். ஆனால் இடையில் ஏற்பட்ட விபத்தை காரணம் காட்டி 225 கோடியாக குறைத்துவிட்டார்களாம். அதற்கு அரை மனதாக சம்மதம் தெரிவித்த ஷங்கர், கொடுத்த காசுக்கு தரமான படத்தை கொடுப்போம் என இருந்தாராம். அதையடுத்து ஷூட்டிங்கை எடுக்க தயாரானது போது கொரோனா பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இந்தியன் 2 படத்தையே லைகா நிறுவனம் கைவிட்டு விட்டதாக வதந்தி பரவியது. 

 

இதையும் படிங்க: கண்ணீர் விட்ட அமலா பால்... “இதற்கு வேறு வழியில்லையா” என கதறல்... காரணம் இது தான்...!!

ஆனால் அந்த தகவலை மறுத்த லைகா நிறுவனம் கண்டிப்பாக படத்தை வெளியிடுவோம் என்று உறுதி அளித்தனர். ஆனால் இந்த முறை பட்ஜெட்டில் இருந்து 50 கோடியை கழித்துக்கொண்டு 175 கோடி ரூபாய்க்கு படத்தை முடிக்கும் படி கேட்டுள்ளார்கள். இதனால் ஷங்கர் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டாராம். ஏற்கனவே சொன்னதை விட பட்ஜெட்டை குறைத்ததால் கடுப்பில் இருந்த ஷங்கர், அதிலும் 50 கோடியை உருவியதால் காண்டாகிவிட்டராம். எவ்வளவு கோடி பட்ஜெட் என முடிவு செய்துவிட்டு சொல்லுங்கள் என கடுப்பாக தயாரிப்பாளர் தரப்பில் ஷங்கர் சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 

click me!