"5 முறை தொழுகை செய்யாவிட்டாலும், என் மதத்தின் மீது பற்றுக்கொண்டவன் நான்"... ஷாரூக்கானின் உருக்கமான பேச்சு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 27, 2020, 05:08 PM ISTUpdated : Jan 27, 2020, 05:29 PM IST
"5 முறை தொழுகை செய்யாவிட்டாலும், என் மதத்தின் மீது பற்றுக்கொண்டவன் நான்"... ஷாரூக்கானின் உருக்கமான பேச்சு...!

சுருக்கம்

``நான் தினமும் ஐந்து முறை தொழுகையில் ஈடுபடுவதில்லை. ஆனாலும் நான் ஒரு இஸ்லாமியன். நான் இஸ்லாத்தின் கொள்கைகளை நம்புகிறேன். 

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நாட்டின் 71வது குடியரசுத் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் சிஏஏ சட்டம் குறித்து பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களான ஆமீர் கான், ஷாரூக்கான் கருத்து தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. ஏன்? இது குறித்து பிரபல நடிகை கங்கனா ரனாவத் கூட பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: மீண்டும் மேடையில் உணர்ச்சிவசப்பட்ட சூர்யா... நா தழுதழுக்க பேசியதால் உருகிய பார்வையாளர்கள்...!

இதனிடையே நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஷாரூக்கான் தனது பிள்ளைகளின் மதம் குறித்து உருக்கமாக பேசிய வீடியா சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது வீட்டில் நாங்கள் எப்போது மதம் குறித்து பேசிக்கொண்டதே கிடையாது. நான் முஸ்லீம், எனது மனைவி ஒரு இந்து, ஆனால் எனது பிள்ளைகள் இந்தியர்கள் என்றார். 

ஒருமுறை எனது மகள் பள்ளி படிவத்தில் என்ன மதம் என்று குறிப்பிட வேண்டி இருந்தது. அப்போது எனது மகள், 'அப்பா நம்ம என்ன மதம்?' என்று கேள்வி கேட்டாள். அதற்கு நான் நாம் இந்தியர்கள், இந்தியன் என எழுது எனக்கூறினேன். 

இதையும் படிங்க: கோடி, கோடியாக சம்பாதித்தாலும் சூர்யா, கார்த்தியின் அடையாளம் இது தான்... மேடையில் மனம் திறந்த நடிகர் சிவக்குமார்...!

``நான் தினமும் ஐந்து முறை தொழுகையில் ஈடுபடுவதில்லை. ஆனாலும் நான் ஒரு இஸ்லாமியன். நான் இஸ்லாத்தின் கொள்கைகளை நம்புகிறேன். அது ஒரு நல்ல மதம் மற்றும் அதில் நல்ல ஒழுக்கம் உள்ளது என்று நான் நம்புகிறேன்"என்றார். அவர் பேச்சை கேட்ட பார்வையாளர்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?