"என் புருஷனுக்கு வனிதா பத்தோட பதினொன்னு"... பகீர் தகவலை வெளியிட்ட பீட்டர் பாலின் முன்னாள் மனைவி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 29, 2020, 4:49 PM IST
Highlights


பீட்டர் பால் ஒரு குடிகாரர், பெண்கள் விவகாரத்திலும் அடிக்கடி சிக்கிக் கொள்ளவார். என்ன இருந்தாலும் கணவர் என்பதால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன். 

வனிதாவுக்கும், பீட்டருக்கும் திருமணம் ஆன அடுத்த நாளே பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.பிரபல நடிகை வனிதா விஜய்குமாருக்கும் விஷ்வல் எடிட்டர் பீட்டர் பாலுக்கும் கடந்த 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணமாகும், தனது இரண்டு மகள்கள் முன்னிலையில் பீட்டரை வனிதா கரம் பிடித்தார். 

 

இதையும் படிங்க:  பிரவசத்திற்கு பின் ராதிகா மகளிடம் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... கடைசி போட்டோவை பார்த்தால் நீங்களே அசந்துபோவீங்க!

இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், எனக்கும் பீட்டருக்கும் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.நாங்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்.என்னிடம் விவாகரத்து வாங்காமல் பீட்டர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து வனிதா பேசுகையில், "இது எதிர்பார்த்த ஒன்று தான்.. பீட்டர் 8 ஆண்டுகளுக்கு முன்பே அவரை விட்டு பிரிந்துவிட்டார். மேலும் நாங்கள் திருமணம் செய்வது எலிசபெத்திற்கு தெரியும் என்றும் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை சட்ட ரீதியாக நாங்கள் சந்திக்க தயார் என்றும் தனது பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார். 

 

இதையும் படிங்க:  ஆபாச நடிகை மியா கலிஃபா தற்கொலை?... சோகத்தில் மூழ்கிய ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்த செய்தி...!

இதனிடையே ஆன்லைன் பேட்டி ஒன்றில் பேசியுள்ள பீட்டர் பாலின் முன்னாள் மனைவி, முறையாக விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால் விட்டுச்சென்றுவிட்டார். என் பிள்ளைகளுக்கும் எனக்கும் என்ன பதில். யூ-டியூப் சேனலை ரன் செய்ய வேண்டும் என்பதற்காக எனது கணவரை வீட்டிற்குள்ளேயே வைத்து வனிதா காரியம் சாதித்து கொண்டார். எனக்கு விவாகரத்து கொடுப்பதில் விருப்பம் இல்லை. 

பீட்டர் பால் ஒரு குடிகாரர், பெண்கள் விவகாரத்திலும் அடிக்கடி சிக்கிக் கொள்ளவார். என்ன இருந்தாலும் கணவர் என்பதால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன். எங்களை சேர்ந்தவர்கள் எல்லாரும் போன் செய்து விசாரிக்கின்றனர்,. என்ன உங்க கணவர் வேறு திருமணம் செய்து கொண்டாராமே? என விசாரிக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. எனக்கு எனது கணவருடன் சேர்ந்து வாழவே விருப்பம் என தெரிவித்துள்ளார். மேலும் பீட்டர் பாலுக்கு தற்போது வருமானம் ஏதுமில்லாததால், வனிதா போன்ற நடிகையுடன் செட்டில் ஆகிவிட்டால் அவர் சொல்லும் வேலையை செய்து கொண்டு காலம் தள்ள பிளான் போட்டுள்ளார். அதனால் தான் பீட்டர் பால் பத்தோட பதினொன்னாக வனிதாவை திருமணம் செய்துள்ளார் என சகட்டுமேனிக்கு கிழித்தெடுத்துள்ளார். 

click me!