
தமிழக விவசாயிகள் கடந்த 33 நாட்களாக தொடர்ந்து தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விடா முயற்சியோடு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று டில்லியில் தங்களுக்கு நியாயம் வேண்டி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிண்டியில் இயக்குனர் கௌதமன் மற்றும் இளைஞர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பெரும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது பின் அந்த கூட்டத்தை கலைப்பதற்காக, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று கொண்டாடப்பட்டு வரும் தமிழ்ப் புத்தாண்டிற்கு அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எம் விவசாயிகள் என்றைக்கு மகிழ்ச்சியோடு செல்கிறார்களோ அன்றைக்குத்தான் இனிய புத்தாண்டு என்று உருக்கமாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.