நடிகை நந்தினி எந்தநேரமும் கைது... தலைமறைவானவரை தேடும் போலீசார்...

First Published Apr 14, 2017, 11:51 AM IST
Highlights
serial actress nandhini arrest


சமீபகாலமாக சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் பிரபல நடிகை மைனா என்கிற நந்தினியின் காதல் கணவர் கார்த்திக் சமீபத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தற்கொலைக்கு முன்னர் கார்த்திக் எழுதிய கடிதத்தில் தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தைதான் காரணம் என்று எழுதி வைத்திருந்தார். மேலும் தன்னை தன்னுடைய முன்னாள் காதலி வெண்ணிலாவின் பக்கத்தில் புதைக்க வேண்டும் என மிகவும் உருக்கமாக எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் நந்தினி மற்றும் அவரது தந்தை இருவர் மீதும் கார்த்திக்கின் தாயார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் இருவரும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் சார்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நந்தினியின் முன் ஜாமீன் மனு  விசாரணைக்கு வந்தபோது அந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் எந்த நேரமும் நந்தினியும் அவரது தந்தையும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் அதே நேரத்தில் இருவரும் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

click me!