ஃபிலிம் சேம்பரும், தயாரிப்பாளர் சங்கமும் மிரட்டியதால்தான் நான் நடிப்பதில்லை - நடிகர் சுரேஷ் கோபி பகீர் குற்றச்சாட்டு...

 
Published : Nov 25, 2017, 10:31 AM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
ஃபிலிம் சேம்பரும், தயாரிப்பாளர் சங்கமும் மிரட்டியதால்தான் நான் நடிப்பதில்லை - நடிகர் சுரேஷ் கோபி பகீர் குற்றச்சாட்டு...

சுருக்கம்

Film Chamber and Producers Association threatned me so only i stop act Actor Suresh Gopi

ஃபிலிம் சேம்பரும், தயாரிப்பாளர் சங்கமும் என்னை மிரட்டியதால்தான் படங்களில் நடிப்பதில்லை என்று நடிகரும் பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபி பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி.

இவர் நடிகராக இருக்கும்போது பாஜகவில் சேர்ந்து தற்போது ராஜ்யசபா எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

ஆனால், சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய சுரேஷ்கோபி, “அரசியலில் ஈடுபட்டதால் நான் படங்களை நடிப்பதை நிறுத்தவில்லை. படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டேன். அதன் வெற்றியை திரையுலகில் உள்ள ஒரு சிலரால் சகிக்க முடியவில்லை.

அதனால், ஃபிலிம் சேம்பர் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அந்த டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும்படி நிர்ப்பந்தித்தார்கள்.

மக்களோடு மக்களாக நேரடியாக கலந்து பழகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அந்த ரியாலிட்டி ஷோவை விட்டுவிட நான் விரும்பவில்லை. அதனால், படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!