விபத்தில் சிக்கி பிரபல தொகுப்பாளினி மரணம்...!

 
Published : May 06, 2018, 03:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
விபத்தில் சிக்கி பிரபல தொகுப்பாளினி மரணம்...!

சுருக்கம்

famous news reader death in accident

தற்போதெல்லாம் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு, தொகுப்பாளர்களுக்கும், செய்தி வாசிப்பாளர்களுக்கும் கூட நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பிரபல மலையாள தொலைகாட்சியில் செய்தி தொகுப்பாளராக இருந்தவர் சூர்யா வாசன்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று, தன்னுடைய உறவினர் வீடிற்கு சென்று விட்டு மீண்டும் இரண்டு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வேன் நிலை தடுமாறி இவருடிய வண்டியின் மீது மோதியது.

இந்த சம்பத்தில் தூக்கி வீசப்பட்ட சூர்யா வாசன், கண் இம்மைக்கும் நேரத்தில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இவர் கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடிப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த கோர விபத்தில் செய்தி தொகுப்பாளர் சூர்யா வாசன் அதே இடத்தில் மரணமடைந்தார். 29 வயதாகும் சூர்யா நீண்ட காலமாக பிரபல மலையாள தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார். மேலும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு தான் இவருடைய தந்தை உயிரிந்ததாக கூறப்படுகிறது. 

இவரின் மறைவிற்கு, ரசிகர்கள் பலர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி