'எங்க வீட்டு மாப்பிளை' நிகழ்ச்சியின் ஏமாற்று வேலை! ஆர்யா எப்படி? முதல் முறையாக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட போட்டியாளர்!

By manimegalai aFirst Published Feb 21, 2019, 4:11 PM IST
Highlights

நடிகர் ஆர்யா விரைவில், தன்னுடன் 'கஜினிகாந்த்' படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சயிஷாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக காதலர் தினத்தன்று அறிவித்தார். இதனால் கடுப்பாகிய, 'எங்கள் வீடு மாப்பிள்ளை' நிகழ்ச்சி போட்டியாளர் ஒருவர் கோவத்தில் கொந்தளித்துள்ளார்.
 

நடிகர் ஆர்யா விரைவில், தன்னுடன் 'கஜினிகாந்த்' படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சயிஷாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக காதலர் தினத்தன்று அறிவித்தார். இதனால் கடுப்பாகிய, 'எங்கள் வீடு மாப்பிள்ளை' நிகழ்ச்சி போட்டியாளர் ஒருவர் கோவத்தில் கொந்தளித்துள்ளார்.

'கஜினிகாந்த்' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது,  ஆர்யா மற்றும் சாயிஷா இருவருக்கும் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் அது காதலாக மாறியது. முதலில் இவர்களுடைய காதலுக்கு சாயிஷா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், பின் காதலுக்கு பச்சை கொடி காட்டினர். 

இதை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் வரும் மார்ச் மாதம், திருமணம் நடைபெற உள்ளது. இதனை நடிகர் ஆர்யா காதலர் தினத்தன்று சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார். இதனை அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் தொடர்ந்து இருவருக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் இவர்களுடைய திருமணம் பற்றிய செய்தியை அறிந்த எங்கள் வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவரான குஹாஷினி, இந்த நிகழ்ச்சியை பற்றியும் ஆர்யாவை பற்றியும் இது வரை வெளிவராத பல தகவல்களை முதல் முறையாக கூறியுள்ளார்.

இது குறித்து, குஹாஷினி, தனியார் ஊடகம் ஒன்றிக்கு பேட்டி அளித்துள்ளார்.  அதில் ஆர்யாவை பார்த்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை'  நிகழ்ச்சி ஒரு ஸ்கிப்டிங் செய்யப்பட்ட நிகழ்ச்சி என்றும், வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியில் இருந்து யாராவது அழைப்பு கொடுத்தால் தயவுசெய்து கலந்து கொள்ளாதீர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இது முழுக்க முழுக்க ஏமாற்றுவேலை என்று கூறியுள்ள குஹாஷினி, ஆர்யா மற்றும் சயிஷா திருமணம் குறித்து கேள்விப்பட்ட உடன் கோபமடைந்தேன் என தன்னுடைய ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

ஆர்யா திருமணம் செய்து கொள்வதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என சொன்னார், ஆனால் அவர் கேமராவை பார்த்தால் அப்படியே மாறிவிடுவார்.  அவரை நேரில் மட்டும் நான் பார்த்தால் அடித்து விடுவேன். திருமணத்திற்கு அழைத்தாலும் செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.

click me!