
நடிகை ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ரஞ்சித் என்கிற இயக்குனரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 வயது இளம் நடிகையை வைத்து, ரஞ்சித் என்கிற 25 வயது இளம் இயக்குனர், 'மூன்று பேர்' என்கிற வெப் தொடர் ஒன்றை இயக்கி வந்துள்ளார். இந்த வெப் தொடரில் நடித்து வந்த நடிகையிடம் பல முறை ரஞ்சித் தன்னுடைய காதலை கூறியுள்ளார். நடிகை அதனை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் சில முறை வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இப்படி தன்னிடம் நடந்து கொள்ளவேண்டாம் என பல முறை எச்சரித்த அந்த நடிகை, ஒரு நிலைக்கு மேல் பொறுமை இழந்து, கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார், அந்த வெப் சீரிஸில் பணியாற்றிய இயக்குனர் ரஞ்சித் மற்றும் துணை இயக்குனர் ஒருவரை அழைத்து விசாரணை செய்ததில், நடிகைக்கு ரஞ்சித் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.