உஷார்... இப்படி  போட்டோவுக்கு போஸ் கொடுத்ததால் நடிகை கைது...!!! படம் உள்ளே

First Published Feb 10, 2017, 4:16 PM IST
Highlights


சின்னத்திரையில் இந்தியில் ஒளிபரப்பாகி வரும் 'எக் யோதா' என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி அல்பாட். இவர் தற்போது பியர்ல்புரி என்ற டிவி நடிகருடன் இணைந்து தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.
 
இந்த தொடரின் படப்பிடிப்புக்காக உண்மையான பாம்பு ஒன்றை ஏற்பாடு செய்து படக்குழு ஷூட்டிங் நடத்தியுள்ளனர்.   அந்த பாம்பை  நடிகை ஸ்ருதி உள்பட ஒருசிலர் கையில் பிடித்து போஸ் கொடுத்தனர். பின்னர் அந்த  புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.
 
இதனை கண்ட சமூல நல ஆர்வலர்கள் பாம்பை கையில் பிடித்து போஸ் கொடுத்தவர்கள் மீது தானே வனத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். 

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ய வந்த அதிகாரிகளிடம் நடிகை ஸ்ருதி, 'தாங்கள் வைத்திருந்தது உண்மையான பாம்பு இல்லை என்று கூறினார்.
 
ஆனால் வனத்துறை அதிகாரிகள் அந்த புகைப்படத்தை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்ததில் அது உண்மையான பாம்புதான் என்று  உறுதி செய்த பின் .  நடிகை ஸ்ருதி அல்பாட், பியர்ல் புரி, தயாரிப்பாளர்களான நிதின் சோலங்கி, உட்கார்ஷ் பாலி ஆகிய நான்கு பேரும் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 

 

click me!