
பத்மாவதி திரைப்படம் வெற்றிகரமாக ஓட வேண்டும் என சித்தி விநாயகர் கோயிலில் நடிகை தீபிகா படுகோனே இன்று வழிபாடு செய்தார்.
பதினாறாம் நூற்றாண்டு காலத்தில் ராஜஸ்தானை ஆண்ட சித்தூர் ராணி பத்மினியின் ஆட்சி காலத்தை மாதிரியாக வைத்து ‘பத்மாவதி’ என்ற பெயரில் பிரபல டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி சினிமா படம் தயாரித்துள்ளார்.
இதில் சித்தூர் ராணி பத்மினியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதில் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தவறாக சித்தரிக்கும் வகையில் கதை அமைந்துள்ளதால் ராஜபுத்திரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு இயக்குநர் பஞ்சாலி மறுப்பு தெரிவித்துள்ளார். பத்மாவதி படத்தை வெளியிடக்கூடாது என பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் திட்டமிட்டபடி கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி படம் வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே பத்மாவதி படத்தின் பெயர் பத்மாவத் என்று மாற்றப்பட்டது. ஆனாலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ஜனவரி 25-ந் தேதி பத்மாவத் படத்தை வெளியிடலாம் என்று அனுமதி வழங்கியது நீதிமன்றம். இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் அந்த படம் முக்கிய நகரங்களில் திரையிடப்பட உள்ளது.
இந்த நிலையில் பத்மாவத் படத்தை வெளியிட்டால் தியேட்டர்களை தீவைத்து எரிப்போம் என்று கர்னி சேனா அமைப்பினர் மிரட்டல் விடுத்தனர்.
ஆனாலும் படம் வெளியிடப்படும் என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறிவிட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ள ‘பத்மாவத்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓட வேண்டும் என மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் நடிகை தீபிகா படுகோனே இன்று வழிபாடு செய்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.