ஜெயிலில் களி தின்ன சென்ற ஷாரூக் மகன் ஆர்யன் கான்… சிறையில் ஆர்யனுக்கான கட்டுப்பாடுகள் என்ன?

Published : Oct 08, 2021, 08:02 PM IST
ஜெயிலில் களி தின்ன சென்ற ஷாரூக் மகன் ஆர்யன் கான்… சிறையில் ஆர்யனுக்கான கட்டுப்பாடுகள் என்ன?

சுருக்கம்

ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்படுவதை தடுக்க ஷாருக்கான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்படுவதை தடுக்க ஷாருக்கான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடத்திய புகாரில் இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள், தோழி கைது செய்யப்படனர். அவர்களை விசாரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. விசாரணை முடித்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அதிகாரிகள், மேல் விசாரணைக்கு அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இந்தநிலையில் கொரோனா பரிசோதனைக்காக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கட்டுப்பாட்டிலேயே ஆர்யன் கான் வைக்கப்பட்டிருந்தார். இதனிடையே சிறை செல்வதற்கு முன்பே ஆர்யனை ஜாமீனில் வெளிகொண்டுவர அவரது தந்தை ஷாருக்கான் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆர்யன் கான் உள்ளிட்டவர்களின் ஜாமின் மனு விசாரணைக்கு ஷாருக்கானே நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார். ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஜாமின் வழங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அனைவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இதனிடையே, ஆர்யன் காண் உள்ளிட்டவர்களுக்கு நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் என்றே முடிவு வந்தது. இதையடுத்து அனைவரும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் சிறைச்சாலையில் ஆர்யன்கானுக்கான விதிமுறைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாயில் கருவறையில் இருந்து வெளிவந்த நாள் முதல் தங்கத் தொட்டிலும், தங்கக் கட்டிலும் உல்லாச வாழ்க்கை அனுபவித்து வந்த ஆர்யன் கான், சிறைச்சாலையில் ஆறு மணிக்கே எழ வேண்டும். அவருக்கு காலை உணவு 7 மணிக்கு வழங்கப்படும். 11 மணிக்கு மதிய உணவும், மாலை ஆறு மணிக்கு இரவு உணவும் வழங்கப்படும். சப்பாத்தி, உப்புமா, பருப்பு சாதம் மட்டுமே உணவுகளாகும். இரவு உணவை மட்டும் கைதிகள் விரும்பினால் 8 மணிக்கு சாப்பிடலாம். சாப்பிட்டு முடித்த பின்னர் தட்டை ஆர்யன் கானே எடுத்துச் செல்ல வேண்டும். மாலை ஆறு மணிக்கு மேல் ஆர்யன் கானை யாரும் சந்திக்க முடியாது என்றும் விதிமுறைகள் தெரிவிக்கின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !