சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவர்..! அதிரடியாக கைது செய்த போலீசார்..!

By manimegalai aFirst Published Jul 7, 2021, 11:55 AM IST
Highlights

நடிகை சனம் ஷெட்டி தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வரும் நபரை கைது செய்யவேண்டும் என, போலீசில் புகார் கொடுத்த நிலையில் தற்போது சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கல்லூரி மாணவர் என்பதை கண்டு பிடித்து அவரை கைது செய்துள்ளனர்.
 

நடிகை சனம் ஷெட்டி தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வரும் நபரை கைது செய்யவேண்டும் என, போலீசில் புகார் கொடுத்த நிலையில் தற்போது சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கல்லூரி மாணவர் என்பதை கண்டு பிடித்து அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்: மனைவி பிறந்த நாளை சர்பிரைஸ் கொடுத்த பிக் பாஸ் ஆரி! கொண்டாட்டத்தில் விஜய் டிவி பிரபலமும் இருக்காரே!
 

நடிகை சனம் ஷெட்டி 'அம்புலி' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடிய தர்ஷனின் காதல் விவகாரம் தான். இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களது  திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின்னர் சனம் ஷெட்டி தர்ஷன் மீது போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஆரம்பதில் இவர் நடந்து கொண்ட விதம் நடிப்பது போல் தெரிந்தாலும், பின்னர் அவரது உண்மை குணம் என்ன என்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது. மனதில் பட்டத்தை பளீச் என பேசும் குணம் இவரிடம் இருந்ததால், சனம் ஷெட்டிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கூடியது . இவர் வெளியேறிய பின் கூட மீண்டும் சனம் ஷெட்டி, வயல் கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வர வேண்டும் என பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர்.

மேலும் செய்திகள்: நடிகர் திலீப் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!
 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் அடுத்தடுத்து சில படங்களில் சனம் ஷெட்டி நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், இவருடைய நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட வெளிவராதது ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம் என்றே கூறலாம். எனினும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருபவர்.

மேலும் செய்திகள்: பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார்..!
 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜுகளை அனுப்பி வருவதாக, திருவான்மியூர் காவல் நிலையத்தில் சனம் ஷெட்டி பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில்... சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜுகளை அனுப்பியது திருச்சியை சேர்ந்த ராய் என்கிற கல்லூரி மாணவர் என தெரிய வரவே, அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.


 

click me!