
கெளதம் கார்த்திக் நடித்த 'இந்திரஜித்' என்ற படத்தின் நாயகியும் இந்தி சீரியல் ஒன்றில் பார்வதி தேவியாகவும் நடித்து வருபவர் பிரபல நடிகை சோனாரிகா படோரியா. இவருக்கு மர்ம நபர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக செல்போனில் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.
முதலில் நடிகை சோனாரிகாவை தான் காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அந்த மர்ம நபர் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதை பெரிதாக கண்டுகொள்ளாமல் அந்த நம்பரை சோனாரிகா பிளாக் செய்துவிட்டார். ஆனால் தொடர்ந்து பல்வேறு எண்களில் இருந்து அவருக்கு காதல் மெசேஜ்கள் வந்து கொண்டே இருந்தது.
அதனை அவர் கண்டுகொள்ளாததால் ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகை சோனாரிகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிசார் விசாரணை செய்தபோது, அந்த மர்ம நபர், கல்லூரி ஒன்றில் 2ஆம் ஆண்டு படித்து வரும் மாணவர் என்பதை கண்டுபிடித்து அவரை விசாரித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.