இவங்க எல்லாம் என்ன ஜெயலலிதாவா ? எடப்பாடி குரூப்பை பஞ்சராக்கிய ரஜினிகாந்த் !!

By Selvanayagam PFirst Published Aug 13, 2018, 11:08 PM IST
Highlights

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில்  இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் பங்கேற்ற நிலையில், தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் வந்திருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பிய நடிகர் ரஜினிகாந்த், இவர்கள் எல்லாம் என ஜெயலலிதாவா ? என காட்டமாக பேசினார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில்  நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. . இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  மற்றும் கருணாநிதி குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் கருணாநிதியின்  உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் , திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துக் கூட  பார்க்க முடியவில்லை என்றார்.

இலக்கியம், சினிமா என பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் கருணாநிதி. பழையவராகவோ, புதியவராகவோ இருந்தாலும், கருணாநிதி இல்லாது அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியவர் கருணாநிதி என்றும் அவர் புகழாரம் சூட்டினார்..

பல வஞ்சனைகள்,  சூழ்ச்சிகள் போன்றவற்றை தாண்டி அரசியலில் ஜொலித்த கருணாநிதியால் அரசியலுக்கு வந்தோர் லட்சம் பேர் உள்ளனர் என்றார்.

.

இந்த இடத்தில்  நான் இதை சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்த ரஜினிகாந்த், கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கு ராகுல் காந்தி, பல மாநில முதலைமைச்சர்கள்  என ஒட்டு மொத்த இந்தியாவே வந்த நிலையில்  தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் வந்திருக்க வேண்டாமா ?  என கேள்வி எழுப்பினார்.

கருணாநிதி எத்தனை பெரிய ஜாம்பவான் என கூறிய ரஜினி, அவருக்கு உரிய  மரியாதை தர வேண்டாமா ? என தெரிவித்த  ரஜினிகாந்த்  இவங்க எல்லாம் என்ன ஜெயலலிதாவா என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

click me!