சின்மயி ஒரு சைக்கோ... அவங்க அம்மா ஒரு சைக்கோ... சுவிச்சர்லாந்தில் நடந்த கதையை போட்டுடைத்த வைரமுத்துவின் உதவியாளர்!

By vinoth kumarFirst Published Oct 22, 2018, 1:23 PM IST
Highlights

சின்மயி சொன்னது எல்லாமே பொய் தான். சின்மயி கோபித்து கொண்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதாக சொன்னது பொய். அவரும் அவரின் அம்மாவும் அங்கு கூடுதலாக  சில நாட்கள் தங்கி இருந்தனர். வைரமுத்து தான் வேறு வேலை காரணமாக உடனிடியாக அங்கிருந்து அடுத்த நாளே வெளியேறினார்.

வைரமுத்து மீது “மீ டூ” ஹேஷ் டேகில் பாலியல் புகார் கொடுத்ததோடு , பிரஸ்மீட் வைத்து கூடுதல் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் சின்மயி. என்னுடைய பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது. அது கிடைத்ததும் வைரமுத்து மீது சட்டப்படி புகார் கொடுப்பேன் என்றும் அந்த பிரஸ் மீட்டில் அவர் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக வைரமுத்து தரப்பிலிருந்து ஒரே ஒரு வீடியோ தான் வெளியிடப்பட்டது. 

அதில் பேசிய வைரமுத்து தன்மீது எந்த தவறும் இல்லை என்று அதில் தெரிவித்திருந்தார். அதன் பிறகு இந்த “மீ டூ” விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. ஆனால் வைரமுத்து தரப்பில் இருந்து அந்த வீடியோவை தொடர்ந்து எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அவரின் உதவியாளரான பாஸ்கர். சுவிச்சர்லாந்த் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். 

அதில் சின்மயி சொன்னது எல்லாமே பொய் தான். சின்மயி கோபித்து கொண்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதாக சொன்னது பொய். அவரும் அவரின் அம்மாவும் அங்கு கூடுதலாக  சில நாட்கள் தங்கி இருந்தனர். வைரமுத்து தான் வேறு வேலை காரணமாக உடனிடியாக அங்கிருந்து அடுத்த நாளே வெளியேறினார். அதன் பிறகு 2013ல் வைரமுத்துவுக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்ட போது கூட, சின்மயி நேரில் பொக்கேயுடன் வாழ்த்து தெரிவிக்க வந்தார். 

அந்த பொக்கேவை வாங்கி கொண்டு நான் தான் அவரை அனுப்பி வைத்தேன். அப்போது கூட வைரமுத்து சின்மயியை சந்திக்கவில்லை. சின்மயி மொத்தத்தில் ஒரு சைக்கோ. அவரின் அம்மாவும் ஒரு சைக்கோ தான். அவரின் அம்மா மனநிலை சரியில்லாமல் சில நாள் சிகிச்சை பெற்று வந்தார். அது மட்டுமல்ல அவரின் அப்பா கூட அவர் அம்மாவின் இந்த சைக்கோ நடவடிக்கைகளால் தான் குடும்பத்தை விட்டே போய்விட்டார் என்றும் வைரமுத்துவின் உதவியாளர் தெரிவித்திருக்கிறார்.

click me!