
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி கரையை கடந்த மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை விட, வரலாறு காணாத அளவில் டிசம்பர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை பெய்த கனமழை சென்னையை புரட்டி போட்டது. பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியது.
இதனால் பல மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் அவதிக்க உள்ளாகினர். இந்நிலையில் இன்று மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்க துவங்கியுள்ளது. மேலும் நடிகர்கள் சூர்யா தொடங்கி, இயக்குனர் அமீர், நடிகர் சூரி, நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் வடிவேலு உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற உதவிகளை காசோலையாக கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, 15 லட்சம் ரூபாய்க் காண காசோலையை தற்போது கொடுத்துள்ளனர் 'டிமான்டி காலனி 2' படக்குழுவினர். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் உருவான பாதிப்புகளை துடைத்தெறியும் பணியில் கழக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. கழக அரசின் இப்பணிகளுக்கு பலரும் பங்களிப்பும் செய்து வருகின்றனர்.
அந்தப் பணிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், 'டிமான்டி காலனி 2' திரைப்படக் குழுவின் சார்பில் அப்படத்தின் கதாநாயகனான தம்பி அருள்நிதி, தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன், இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து ரூ.15 லட்சத்திற்கான காசோலையை 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு இன்று நம்மிடம் வழங்கினர். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்" என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.