BiggBoss5"மக்கள் எனக்கு பிச்சை போட்ருக்காங்க" எமோஷன் ஆனா அபிஷேக், ஏற்றிவிட்ட பிரியங்கா!!

By Kanmani PFirst Published Dec 2, 2021, 7:17 AM IST
Highlights

Bigg Boss Tamil 5 பிரியங்கா-அபிஷேக் நட்பு பற்றிய கேள்வியை தொடர்ந்து கவுஸ்மேட்ஸ் எழுப்பி வருவதால்  செம கடுப்பாகிறார் அபிஷேக்.

பிக் பாஸ் சீசன் 5 செம விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் பிரேக்கிங் நியூஸ் டாஸ்க் தொடர்ந்தது. அப்போது ராஜு- இமான் அண்ணாச்சி இருவரும் தொகுத்து வழங்கினர். அதில் தாமரை எழுப்பிய கேள்வியையாய் இவர்களும் மீண்டும் எழுப்பினர். அதாவது அபிஷேக்-பிரியங்கா நட்பு குறித்து கேட்டனர். அதோடு லைட் ஆஃப் செய்த பிறகு இருவரும் விளையாடுவதாக கூறி கலாய்த்தனர். 

பின்னர் பிரியங்கா டீம் டாஸ் செய்ய ஆரம்பித்த போது இருவருக்கும் இடையேயான நட்பு என்னவென்று அபிஷேக்-பிரியங்கா இருவரும் தங்களது நடிப்பின் மூலம் விளக்கம் அளிக்க அதையும் ஹவுஸ் மேட்  விமர்சிக்கிறார்கள்.

பின்னர் இருவரும் தனியாக அமர்ந்து மற்ற போட்டியாளர்கள் தங்களை பற்றி நினைக்கும் கருத்து குறித்து விவாதிக்கின்றனர். அப்போது தாமரை உள்ளிட்ட போட்டியாளர்கள் தங்களை பார்க்கும் பார்வையையும் அவர்கள் கூறிய விமரிசனங்களையும் பிரியங்கா எடுத்து கூற செம கடுப்பான அபிஷேக் மக்கள் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் தனக்கு பிச்சை போட்டுள்ளதாக கூறி எமோஷன் ஆகிறார்.

பிக் பாஸ் சீசன் 5-ல் முதல் ஆளாக மிக குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறியவர் அபிஷேக் தான் பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் இவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். அபிஷேக் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து, எந்த பிரச்சினையிலும் தலையிடாமல் அமைதியாக இருந்து வந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக பிரியங்கா மற்றும் நிரூப் இருவரையும் மற்ற போட்டியாளர்கள் கார்னர் செய்வதை பார்த்துவிட்டு தற்போது பொங்கி எழுந்து விட்டார். 

click me!