குழந்தை கடத்தல் வழக்கு ! பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று வனிதாவை கைது செய்ய முடியாமல் திரும்பிய போலீஸ் !!

By Selvanayagam PFirst Published Jul 3, 2019, 8:52 AM IST
Highlights

தனது குழந்தையை கட்த்திக் கொண்டு வந்துவிட்டதாக பிக்பாஸ் வீட்டில் தங்கியிருக்கும் நடிகை வனிதாவின் முன்னாள் கணவர் கொடுத்த புகாரில் அவரை கைது செய்ய பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற தமிழக-தெலங்கானா போலீசார் அவரை கைது செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் மாணி்க்கம் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாகவும், சந்திரலேகா படத்தில் விஜய் ஜோடியாகவும் நடித்தார்.  கடந்த 2000ம் ஆண்டில் ஆகாஷ் என்ற டிவி நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.   

இவர்களுக்கு விஜய் ஸ்ரீகரி என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற மகள்  உள்ளார்.  இதன் பின்னர் வனிதாவுக்கும் ஆகாஷுக்கும் விவாகரத்து ஆனது.  2007ம் ஆண்டில் ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் வனிதா.  இவர்களுக்கு ஜெயந்திகா என்ற மகள் பிறந்தார்.2010ம் ஆண்டுக்கு பின்னர் ஆனந்தராஜையும் விவாகரத்து செய்தார்.

தற்போது அவர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.   இந்த நிகழ்ச்சி கடந்த 9 நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.  பிக்பாஸ் முதல் நாள் அறிமுக நிகழ்ச்சி்யில் வனிதாவுடன் இரு பெண் குழந்தைகளும் வந்திருந்தனர்.
 
தந்தை ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வந்த ஜெயந்திகாவை வனிதா கடந்த  பிப்ரவரி மாதம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்றுக்கொண்ட அம்மாநில போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   இந்த வழக்கில் வனிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாட்டு போலீசை உதவியை நாடியது தெலுங்கானா போலீஸ்.  

பிக் பாஸ் வீடு காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள பிலிம்சிட்டி அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து நசரத் பேட்டை போலீசாருடன்  தெலுங்கானா போலீசார் அங்கு சென்றனர்.


 
ஆனால் பிக்பாஸ் சட்ட விதிமுறைகளின்படி தற்போது வனிதா வெளியே வரமுடியாது என்பதை அறிந்து கொண்ட போலீசார் அடுத்து என்ன செய்வது என தெலுங்கானா போலீசாருடன்  ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

click me!