
தமிழ் நாட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'எந்திரன்' படத்தின் மொத்த வசூலை முறியடித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது 'பாகுபலி 2'.
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 9000 திரையரங்குகளில் வெளியான படம் 'பாகுபலி 2'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது 'பாகுபலி 2'. இதுவரை இப்படம் உலகளவில் ரூ.1300 கோடி வசூலைக் கடந்துள்ளது.
பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் அடிப்படையிலும், மக்களிடையேயும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
'பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் தமிழக விநியோகத்தில் ரஜினி நடித்த 'எந்திரன்' படம் தான் ஒட்டுமொத்த வசூலில் ரூ.105 கோடியை ஈட்டியது. இதனை 'பாகுபலி 2' 18 நாட்களில் முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.