
விக்ரம் பிரபு ஏற்றுக் கொள்கிற கேரக்டருக்கு முடிந்தவரை உயிரைக் கொடுத்து நடிப்பவர்தான். ’கும்கி’ மெகா ஹிட்டடிக்க அடுத்தடுத்து வந்த ‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’ படங்களும் விக்ரம் பிரபுவை கவனிக்கத்தக்க இடத்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்தது.
அதன்பிறகுதான் சோதனை… ‘வெள்ளைக்கார துரை’, ‘வீரசிவாஜி’ என எதுவுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
கடந்தவாரம் ரிலீஸான ‘சத்ரியன்’ படத்திலும் குறைவைக்காத நடிப்பையே தந்திருந்தார். பலன்தான் கேள்விக்குறி!
அப்படி அவரே கதை கேட்டு நடிப்பதாலோ என்னவோ தொடர்ச்சியாக அவரது படங்களுக்கு ஆடியன்ஸ் அப்ளாஸ் இல்லாமலே போகிறது போலிருக்கிறது.
இதை தாமதமாக உணர்ந்த விக்ரம்பிரபு ’இனிமேலும் இப்படியே போனால், நடிப்பை மூட்டை கட்டிவிடும்படி ஆகிவிடும்’ என சுதாரித்துக் கொண்டு அடுத்தடுத்து கதை கேட்க அப்பா பிரபுவை துணைக்கு சேர்த்துகொள்ளவிருப்பதாக கேள்வி!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.