படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கிய ஆர்யா இயக்குனர் பற்றி வெளியான சூப்பர் தகவல்!

By manimegalai aFirst Published Aug 28, 2021, 7:02 PM IST
Highlights

 சார்பட்டா படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா தற்போது மீண்டும் யார் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர் அடுத்த படத்தை தயாரித்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்யா தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 'மகாமுனி' படத்துக்குப் பின், வலுவான கதாபாத்திரத்திற்காக காத்திருந்த நிலையில், இயக்குனர் பா ரஞ்சித் கூறிய 'சார்பட்டா' படத்தின் கதை ஆர்யாவை மிகவும் கவர்ந்தது. எனவே இந்த படத்திற்காக, பலகட்ட ரிஸ்க் எடுத்து தன் உடலை ஏற்றி இறக்கி கடின உழைப்பை செலுத்தி இப்படத்தை நடித்து முடித்தார்.

ஆர்யா பட்ட கஷ்டத்திற்கு கைமேல் பலன் கொடுக்கும் விதமாக இத்திரைப்படம், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. ஓடிடி தளத்தில் வெளியானதை விட திரையரங்கில் 'சார்பட்டா பரம்பரை' வெளியாகி இருந்தால், இப்படத்திற்கான ரீச் மற்றும் வசூல் வேறு லெவல் இருந்திருக்கும் என சொல்லாத ரசிகர்களே இல்லை. சார்பட்டா படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா தற்போது மீண்டும் யார் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர் அடுத்த படத்தை தயாரித்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதுவரை ஒரே மாதிரி கதைகளை இயக்காமல் வேறு வேறு கதை அம்சம் கொண்ட வித்தியாசமான கதைகளை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். இவர் இயக்கிய 'நாய்கள் ஜாக்கிரதை', 'மிருதன்', 'டிக் டிக் டிக்' ஆகிய படங்கள் முதலுக்கு மோசம் இல்லாமல் வெற்றிப் படங்களாகவே அமைந்தது. அதேபோல் இவரது கதையும் அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் இருந்தது. 

இவர் தற்போது ஆர்யாவை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளார். இந்த கதை ஆர்யாவிற்கு மிகவும் பிடித்துப்போகவே, இந்த படத்தில் நடிப்பது மட்டும் அல்லாமல்...  இப்படத்தை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம் ஆர்யா.  சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'டெடி' படத்தில் கூட ஆர்யா மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகிய இருவருமே இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!