
கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'அறம்'. இந்த படத்தில் நயன்தாரா இது வரை நடித்திராத மாவட்ட ஆட்சியர் வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் 'மீஞ்சூர் கோபி' இயக்கியுள்ளார். மக்களின் முக்கிய பிரச்சனையான தண்ணீர் பிரச்சனை மற்றும் ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து விளக்கும் வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை படக்குழுவினர் நவம்பர் மாதம் 3 தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவின் காரணமாக ஆகஸ்ட் மாதம் 6 தேதி ரிலீஸ் ஆக இருந்த திரைப்படங்கள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டது.
தற்போது அப்படி நிறுத்தி வைக்கப்பட்ட படங்கள் நவம்பர் 3 தேதி ரிலீஸ் செய்யப்படும் என்றும் இதற்கு அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொண்டது.
இதன் காரணமாக அறம் படக்குழுவினர் நவம்பர் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த இந்த படத்தை நவம்பர் 10 தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.