
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விஜயகாந்தின் மறைவை அடுத்து அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று முழுவதும் அங்கு லட்சக்கணக்கில் குவிந்த ரசிகர்கள் இரவு முழுக்க அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டுசெல்லப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் திரண்டு வந்தனர். நேற்று இரவு விஜய் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று காலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். வெளிநாட்டில் இருப்பதால் இறுதி அஞ்சலி செலுத்த வர முடியவில்லை எனக்கூறி பிரேமலதா மற்றும் சுதீஷிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறி இருக்கிறார் அஜித்.
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக துபாய் நாட்டில் உள்ளார். அங்கு படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் அஜித்தால் வர முடியாமல் போனது. இதன் காரணமாகவே அவர் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... விஜயகாந்துடைய கோபத்துக்கு ரசிகன் நான்... அஞ்சலி செலுத்திய பின் கமல்ஹாசன் உருக்கம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.