தல அஜித்தை வைத்து, காதல் கோட்டை படத்தை இயக்கி, மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் அகத்தியன். தற்போது இவருடைய மூன்றாவது மகள் நிரஞ்சனி, ஒரு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
தல அஜித்தை வைத்து, காதல் கோட்டை படத்தை இயக்கி, மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் அகத்தியன். தற்போது இவருடைய மூன்றாவது மகள் நிரஞ்சனி, ஒரு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
இயக்குனர் அகதியனின், மூத்த மகள் கிருத்திகா, ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இவர் இயக்குனர் திருவை திருமணம் செய்து கொண்டார். அடுத்த மகள் விஜயலட்சுமி சென்னை 28 , அஞ்சாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் முன்னணி நடிகையாக இவரால் நிலைக்க முடியாததால், எனவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
சமீபத்தி பிரபல சீரியலில் நாயகியாக நடித்த இவர், அதில் இருந்து விலகி, நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்தார். இறுதி வரை சென்ற இவர் ஓட்டுக்கள் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் இவரை தொடர்ந்து அகதியனின் மூன்றாவது மகள் நிரஞ்சனி, தற்போது 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். மேலும் இவர் ஏற்கனவே சிகரம் தொடு, காவியத் தலைவன், வாயை மூடி பேசவும், பென்சில், கதகளி, கபாலி உள்பட பல படங்களில் ஹீரோவின் தங்கை, ஹீரோயின் தோழியாக நடித்தார்.
இந்த படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரித்து வர்மா, ரக்ஷனா, நிரஞ்சனா அகத்தியன் ஆகியோர் நடிக்கிறார்கள். தேசிங் பெரியசாமி இயக்குகிறார். கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். மசாலா கபே குழு இசை அமைக்கிறது. ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிக்கிறது.