
அஜித் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷான் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை, மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் முடிவடைந்தது. இதற்காக பிரமாண்டமான கோர்ட்டு செட் போடப்பட்டு அஜித் வழக்கறிஞ்ராக விவாதம் செய்யும் காட்சி எடுக்கப்பட்டது.
இதில் மிக நீளமான வசனத்தை, அஜித் ஒரே டேக்கில் பேசி நடித்துவிட்டாராம். அதை பார்த்து ஒட்டு மொத்த படக்குழுவினரும் அசந்து விட்டார்களாம்.
மேலும் கைத்தக்கட்டி ஆரவாரம் செய்ததோடு, அஜித்துடன் கைகுலுக்கு தங்களுடைய பாராட்டுக்களை அவருக்கு தெரிவித்துள்ளனர். அனைவருடைய பாராட்டு மழையில் நனைந்த அஜித், நெகிழ்ச்சியோடு படக்குழுவினர் அனைவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்த பாராட்டுக்கள் இயக்குனர் வினோத்துக்கு தான் போய் சேர வேண்டும் என்றும், அவருடைய இயக்கத்தில் நடித்ததை மிகவும் சவுகரியமாக உணர்ந்ததாக அஜித் இந்த படத்தின் அனுபவம் குறித்து படக்குழுவிடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.