Aishwarya rajesh: ஐஸ்வர்யா ராஜேஷ் இணையத்தில் புன்னகை அரசி சினேகா குறித்து பகிர்ந்து கொண்ட செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கதாநாயகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப கால திரைப்பயணம்:
ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்பட நடிகை என்பதை தாண்டி, சிறந்த நடன கலைஞர் மற்றும் தொகுப்பாளினி என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் திரைப்படத்துறைக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா,உட்பட பல படங்களில் இவரை தமிழ் மக்களிடம் கொண்டு சென்றது. இருப்பினும், இவருக்கு சிறந்த நடிகை என்ற விருதை பெற்று தந்தது தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை திரைப்படம் ஆகும்.இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்பயணம்:
இதனை தொடர்ந்து, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கு, பல்வேறு தெலுங்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. கடைசியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது, தமிழில் 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். அத்துடன் விளம்பர படங்களிலும் வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் சினேகாவுடன் விளம்பரம்:
சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சினேகா ஆகிய இருவரும், விளம்பரம் படமொன்றில் இணைந்து நடித்துள்ளனர். இந்த விளம்பர படத்தில் சினேகா உடன் நடித்தது பெருமையாக இருந்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவு:
அதில் அவர், நடிகை சினேகா ஒரு அழகான நடிகை. பார்த்தால் பார்த்து கொண்டே இருக்கலாம். நான் சின்னப் பெண்ணாக இருந்தபோது சினேகாவின் படப்பிடிப்பை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு மூலையில் நின்று எனது அம்மாவுடன் பார்த்தேன். எனது அம்மா கூப்பிட்ட போதிலும் அந்த படப்பிடிப்பில் இருந்து வெளியே வர மனதே வரவில்லை. அப்படி இன்று அவருடன் ஒரு விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.