
முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை, உலகநாயகன் கமல் ஹாசன் திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில், திமுக தலைவர் மு க ஸ்டாலினின் இளம் வயது புகைப்படங்கள் மற்றும் அவர் அரசியல் கட்சிக்காக பட்ட இன்னல்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் சிற்பங்கள் இடம்பெற்றிருந்தது.
சென்னையில் நடைபெற்ற கண்காட்சியை, பள்ளி குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் கட்சி தொண்டர்கள், பிரபலங்கள், என அனைவரும் கண்டு களித்த நிலையில், இதே கண்காட்சியை மதுரையில் நடத்தவும் திட்டமிடப்பட்டது. இதற்கான வேலைகளில் அமைச்சர் மூர்த்தி இறங்கிய நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது போலவே, மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் முதல்வரின் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடிகர் விஜய் சேதுபதி இந்த கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, புகைப்பட கண்காட்சி குறித்து மிகவும் பெருமையாக பேசினார். மேலும் செய்தியாளர்கள் ரோகினி திரையரங்கில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தை படம் பார்க்க அனுமதிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு... "எங்கேயும் எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்காக படைக்கப்பட்டது. அதில் வேற்றுமையை யார் எந்த வகையில் செய்தாலும் ஏற்க முடியாது. ரோகினி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
நரிக்குறவ சமுதாயத்தினரை திரையரங்கம் உள்ளே அனுமதிக்காத ரோகினி தியேட்டர் ஊழியர் மீது வழக்கு பதிவு!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.