
இயக்குனர் ஓம் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி உலக அளவில் வெளியான திரைப்படம் தான் ஆதிபுருஷ். இந்த படம் வெளியான முதல் காட்சியிலிருந்தே பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் சுமார் 700 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
ஆனால் இவ்வளவு பெரிய பொருட்செலவு கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் சுமாராக இருப்பதாக ரசிகர்கள் பலர் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டனர். மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்று வசனங்கள், ஒரு இதிகாச திரைப்படத்தில் வரும் வசனங்கள் போல இல்லை என்றும் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வேண்டும் என்று பல மத அமைப்புகளும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் எழுத்தாளர் மனோஜ் சுக்லா தற்பொழுது ஒரு பதிவின் மூலம் தனது தவறுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பின்வருமாறு...
எப்போதும் தான் நடிக்கும் கதைகளை மிக நேர்த்தியாக அமைத்துக்கொள்ளும் பிரபாஸ், கடந்த சில ஆண்டுகளாக அதில் சறுக்கல்களை சந்தித்து வருவதாக அவருடைய ரசிகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பாகுபலி 2 படத்திற்கு பிறகு வெளியான பிரபாஸின் சாகோ, ராதே ஷியாம் மற்றும் ஆதிபுருஷ் ஆகிய மூன்று படங்களும் பெரிய அளவில் அவருக்கு வெற்றிகளை பெற்று தரவில்லை.
இந்நிலையில் பிரபாஸின் சலார் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.
இதையும் படியுங்கள் : ரெடியா நண்பா.. ஷாருக்கானின் ஜவான் டிரைலரை வெளியிடும் தளபதி விஜய்..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.