பொங்கலோ... பொங்கல்... படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய "மும்பை மோகினி"... வைரலாகும் புகைப்படங்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 14, 2020, 02:32 PM IST
பொங்கலோ... பொங்கல்... படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய "மும்பை மோகினி"... வைரலாகும் புகைப்படங்கள்...!

சுருக்கம்

தமிழக பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு புடவையில் தயாராக இருந்த ஸ்ருஷ்டி டாங்கே, படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.

இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் "கட்டில்" திரைப்படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்து வருகிறார். 
இந்த படத்தை மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை இன்று முதல் களைகட்டியுள்ள நிலையில், ஷூட்டிங்கில் பங்கேற்றிருந்த கட்டில் படக்குழுவினர் பொங்கலிட்டி கொண்டாடியுள்ளனர். 

தமிழக பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு புடவையில் தயாராக இருந்த ஸ்ருஷ்டி டாங்கே, படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார். இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் பொங்கல் பண்டிகையை கட்டில் படக்குழுவினர் மகிழ்ச்சியாக கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் "கட்டில்" திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என  இ.வி.கணேஷ்பாபு தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?