பிரபல நடிகை 2 ஆவது திருமணம்..! மகன் முன்னிலையில் இயக்குனரை கரம் பிடித்த போட்டோ..!

By thenmozhi gFirst Published Nov 12, 2018, 1:04 PM IST
Highlights

தமிழில் "வெண்நிலா வீடு" திரைப்படத்தில் நடித்தவர் மலையாள நடிகை சிரிண்டா. இவர் தற்போது  மலையாள இயக்குனர் சிஜூ எஸ் பாவாவை இராண்டாவது திருமணம் செய்து உள்ளார்.

மிழில் "வெண்நிலா வீடு" திரைப்படத்தில் நடித்தவர் மலையாள நடிகை சிரிண்டா. இவர் தற்போது  மலையாள இயக்குனர் சிஜூ எஸ் பாவாவை இராண்டாவது திருமணம் செய்து உள்ளார்.

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள சிரிண்டா, தனது 19 ஆவது வயதில் அஷப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சுமார் 4 ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்த சிரிண்டா, கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார்.

இவருக்கு ஒரு ஆண் மகன் உள்ளார். இந்த நிலையில் சில மாதங்களாக இயக்குனர் சிஜூ எஸ் பாவாவை காதலித்து வந்தார். இவர்களின் திருமணத்திற்கு இருவர் வீட்டிலும் ஓகே சொன்னதை அடுத்து நேற்று நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைப்பெற்றது.

இவர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

click me!