தலை முடியை தானமாக கொடுத்த பிரபல நடிகையின் மகன் ; "இவரல்லவா பிள்ளை" பாராட்டி வரும் ரசிகர்கள்

By Kanmani PFirst Published Nov 8, 2021, 7:37 PM IST
Highlights

பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித்தின் இளைய மகன் அயன் இரண்டு வருடமாக வளர்த்த நீளமான முடியை புற்று நோயாளிகளுக்கு தானமாக கொடுத்துள்ளார்.

உலக கேன்சர் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா போன்ற பிரபலங்கள் தங்களது அனுபவங்களையும், புற்று நோயால் அவதிபடுபவர்களுக்கு தைரியமளிக்கும் விதத்திலும் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே புற்று நோய்க்கு சிகிச்சையில் இருப்பவர்கள் தங்களது தலை முடியை முற்றிலுமாக இழக்கும் அவலம் நாம் அறிந்த ஒன்று தான். இதற்காக கல்லூரி மாணவர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் தங்களது தலை முடியை தனமாக கொடுத்து வருகின்றனர். அந்த வகை பிரபல  பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித்தின் இளைய மகன் ரயன் தனது நீளமான தலைமுடியை புற்று நோயாளிகளுக்கு தானமாக கொடுத்துள்ளார்.

நளினமான நடனத்தின் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் அமெரிக்காவில் டாக்டராக இருந்த ஸ்ரீராம் நீனேவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அரின், அயன் என்னும் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். மாதுரியின் மூத்த மகன் அரின் அமெரிக்காவில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படிக்கிறார். இளைய மகன் அயன் மும்பையில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவரின் இளைய மகன் அயன் இரண்டு வருடங்களா நிலமாக முடியை வளர்த்து வந்துள்ளார். இதனால் அயனை பலரும் கிண்டல் செய்துள்ளார். இவன் ஆண் பிள்ளையா ? பெண் பிள்ளையா? என பலரும் கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். அதோடு தனது தாய் போலவே இருப்பதாக மாதுரியின் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். இது எதையும் பொருட்படுத்தாத அயன் தந்து முடியை கவனமாக வளர்த்துள்ளார். இந்நிலையில் சலூனில் தனது மகனின் நீளமான கூந்தலை வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ள மாதுரிதேசிய புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, மிகவும் சிறப்பான ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

புற்றுநோய்க்காக கீமோ செய்துகொண்டிருந்த பலரைப் பார்த்து ரியான் மனம் உடைந்தார். அவர்கள் கடந்து செல்லும் எல்லாவற்றிலும், அவர்கள் முடியை இழக்கிறார்கள். என் மகன் கேன்சர் சொசைட்டிக்கு தன் தலைமுடியை தானம் செய்ய அழைப்பு விடுத்தான். பெற்றோர்களாகிய நாங்கள் அவருடைய முடிவால் மகிழ்ச்சியடைந்தோம்.

வழிகாட்டுதல்களின்படி, தேவையான நீளமான முடியை வளர்க்க அவருக்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆனது. மேலும் இதுவே இறுதிப் படியாக இருந்தது. இவ்வாறு தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபலங்கள் பலரின் வாரிசுகள் போதை, சொகுசு வாழ்க்கை என சமூகத்தின் மீது அக்கறை காட்டாமல் தீய செயல்களில் ஈடுபட்டு வரும் சூழலில் நடிகை மாதுரி தீக்ஷித்தின் இளைய மகன் செயல் குறித்து ரசிகர்கள் பலர் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

 

click me!