
கோழிக்கோடு வெள்ளிபரம்பைச் சேர்ந்த சாரதா நாடக நடிகராக தனது நடிப்பைத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டு வெளிவந்த 'அங்காக்குறி' திரைப்படத்தில்தான் அவர் திரைப்படங்களில் முதல்முறையாக நடித்தார். இதை தொடர்ந்து 1980களின் நடுப்பகுதியில் ஐ.வி.சசியின் 'அனுபந்தம்', 'அன்யாருடே பூமி' போன்ற படங்களில் நடித்துள்ளார். 'உத்சவ பிட்டேன்னு', 'சதயம்', ' சல்லாபம் ', 'கிளிச்சுண்டன் மாம்பழம்', 'அம்மாளிலிகூடு', 'நந்தனம்', 'யுகபுருஷன்', 'குட்டி ஸ்ராங்கு', 'என்னு நிண்டே மொய்தீன் ' உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
சல்லாபம்' படத்தில் அவரது கதாபாத்திரம் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்றாகும். கோழிக்கோடு சாரதா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் சின்ன திரை ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்றுள்ளார். 84 வயதான இவருக்கு உமாதா, சஜீவ், ரஜிதா, ஸ்ரீஜித் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இதய நோய் சிகிச்சை பெற்று வந்த சாரதா நேற்றிரவு மூச்சு திணறல் காரணமாக கோழிக்கோட்டில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை சாரதாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி சாரதா உயிரிழந்துள்ளாதார். இவரது மறைவிற்கு திரைபிரபலங்களும் பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.